பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
மிகப்பெரிய நடிகர்களின் படங்களோ, அல்லது மிகப்பெரியதாக எதிர்பார்க்கப்படும் படங்களோ வெளியாகும்போது வேறு எந்த படங்களும் ரிலீஸாகி ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள் மற்றவர்கள். 'பாகுபலி' படத்திற்கு முன் தமிழ்நாட்டிலும் சரி, மலையாளத்திலும் சரி, பிரபாஸ் என்கிற நடிகரா.. யார் அவர் என கேள்வி கேட்கும் நிலை தான் இருந்தது... ஆனால் 'பாகுபலி'யின் பிரமாண்டம் அதை மாற்றியது.. அதற்கு காரணம் எஸ்.எஸ்.ராஜமவுலி.. ஏற்கனவே நான் ஈ, பின்னர் பாகுபலி என பிரமாண்டம் காட்டியதால் ராஜமவுலியின் படம் என்றால் தமிழ்நாடு, கேரளா என இரு மாநிலங்களிலும் தனி மரியாதை உருவாகிவிட்டது..
இதனால் தான் மலையாள திரையுலகில் இந்த வாரம் 'பாகுபலி-2' ரிலீஸை முன்னிட்டு எந்த மலையாள படமும் ரிலீசாகவில்லை.. கேரளாவில் மட்டும் சுமார் 300 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகிறது 'பாகுபலி-2'.. இது வழக்கமாக மோகன்லால், மம்முட்டி படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கையை விட ரொம்பவே அதிகம். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கட்டப்பன என்கிற சிறிய நகரத்தில் உள்ள மூன்று தியேட்டர்களில் கூட, இரண்டில் பாகுபலி-2'வைத்தான் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் 'பாகுபலி' என்கிற பெயரின் வீரியத்தை.