ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எம்.டி.வாசுதேவன் நாயரால் மகாபாரத கதையை தழுவி எழுதப்பட்ட ரண்டமூழம் நாவல், 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான முறையில் திரைப்படமாக 'மகாபாரதா' என்கிற பெயரில் தயாராக இருக்கிறது.. இதில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார். 2018ல் ஆரம்பித்து 2020ல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.. ஆனால் இந்தப்படத்தை எடுப்பதற்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது கேரளாவில் உள்ள சங் பரிவார் அமைப்பு..
இதுபற்றி சங் பரிவார் கூறியுள்ளதாவது, “எம்.டி.வாசுதேவன் நாயர் மனதில் தோன்றியதெல்லாம் மகாபாரதம் ஆகிவிடமுடியாது.. ஆயிரம் கோடி என்ன பத்தாயிரம் கோடி பட்ஜெட்டில் எடுத்தால் கூட ரண்டமூழம், மகாபாரதம் ஆகாது. அது மகாபாரதத்தின் ஒரு பகுதி என்றும், அடுத்த தலைமுறைக்கு தவறாக சொல்லப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்தப்படத்திற்கு மகாபாரதா என டைட்டில் வைத்ததை எதிர்த்து சட்டப்படியான நடவடிக்கைகளை தொடர உள்ளோம்” என கூறியுள்ளனர்..