ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்ற கலெக்டர்களில் இருந்து நிறையவே வித்தியாசப்படுபவர். மாபெரும் கலாரசிகர்.. ஒருபக்கம் தனது பணிகளை எந்த வித சுணக்கமும் இல்லாமல், எந்த வித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் செய்துவரும் பிரசாந்த், இன்னொரு பக்கம் மலையாள சினிமாவின் தீவிர ரசிகர்.. கலெக்டர் என்பதற்காக சினிமாவை ஒதுக்கிவைக்க அவர் விரும்பவில்லை. தற்போது மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கிவரும் 'டிவஞ்சிமூல கிராண்ட் பிரிக்ஸ்' என்கிற படத்திற்கு கதையும் எழுதியுள்ளாராம் கலெக்டர் பிரசாந்த்.
அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இதற்கு முன் இயக்கிய ''லார்ட் லிவிங்ஸ்டோன் 7000 கண்டி' படத்திலும் குஞ்சாக்கோ போபன் தான் ஹீரோவாக் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கிறார் குஞ்சாக்கோ போபன், இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கடந்த 2003ல் லோகிததாஸ் இயக்கத்தில் வெளியான 'கஸ்தூரிமான்' படத்தில் நடித்த கேரக்டரையே இதில் கதாபாத்திரமாக மாற்றியுள்ளார்களாம். அதுமட்டுமல்ல,படத்தின் மற்ற முக்கிய கேரக்டர்களையும் அவர்களின் முந்திய படங்களின் கதாபாத்திரங்களில் ஒன்றின் நீட்சியாகவே காட்ட இருக்கிறார்களாம்.