ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் டேக் ஆப். குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், பார்வதி ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்திற்கு மலையாள பிரபலங்கள் மட்டுமல்லாது தமிழ் திரையுலகில் இருந்தும் பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தை சூர்யா பாராட்டியதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் இந்தப்படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரவித்துள்ளார்.
கமல் இந்தப்படத்தை பாரட்டியதன் பின்னணியில் படத்துக்கும் அவருக்கும் தொடர்புடைய நெருக்கமான சில காரணங்கள் உண்டு. இந்தப்படத்தின் இயக்குனரான மகேஷ் நாராயண் கமலின் விஸ்வரூபம் படங்களின் இரண்டு பாகங்களிலும் எடிட்டராக பணியாற்றியவர். இந்தப்படத்தின் மூலம் தான் இயக்குனராக மாறி இருக்கிறார். அடுத்து உத்தம வில்லன் படத்தில் நடித்த பார்வதியின் நடிப்பும் இந்தப்படத்தில் கமலை பிரமிக்க வைத்துள்ளது.. மூன்றாவதாக இந்தப்படம் உருவாக காரணமாக இருந்த மறைந்த இயக்குனர் ராஜேஷ் பிள்ளை..
இந்த ராஜேஷ் பிள்ளையை அவர் மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த காலத்தில் இருந்தே கமலுக்கு நன்றாக தெரியும். தான் மறைவதற்குள் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற ராஜேஷ் பிள்ளையின் கனவை நனவாக்கும் விதமாகத்தான் அவரது சொந்த நிறுவனமே இதை படமாக தயாரித்துள்ளது. ராஜேஷ் பிள்ளையின் கடைசி ஆசை இந்தப்படம் மூலம் நிறைவேறியுள்ளதாகவே கமல் குறிப்பிட்டுள்ளார்.