விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இயக்குனர் விஜய்யுடனான திருமண முறிவிற்கு பின்னர் நடிகை அமலா பால் தீவிரமாக பட வேட்டை நடத்தி வருகின்றார். அதன்பலனாக சில தமிழ்பட வாய்ப்புகளை கைப்பற்றியுள்ள அமலாவிற்கு தெலுங்கு தேசத்திலிருந்தும் வாய்ப்பு வந்துள்ளது. பூரி ஜெகன்நாத் இயக்கவிருக்கும் படத்தில் பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கின்றார். மூன்று நாயகிகள் நடிக்கவிருக்கும் இப்படத்தில் மும்பையைச் சேர்ந்த முஸ்கான் நாயகியாக நடிப்பதாக பூரி ஜெகன்நாத் அறிவித்தார். முதன்மை நாயகியாக நடிகை அமலா பால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூரி ஜெகன்நாத் இயக்கிய “இட்டராம்மவிலதொ” படத்தில் நாயகியாக நடித்த அமலா பால் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடைபெற்றதாம். பெரிய பட்ஜெட் படம் என்பதாலும், டோலிவுட்டின் முன்ணணி நடிகரான பாலகிருஷ்ணாவின் 101வது திரைப்படம் என்பதாலும் இப்படத்தில் நடிக்க அமலாபாலும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். மூன்றாவது நாயகியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் நெருங்கிய தோழி சார்மி நடிக்கலாம் என கூறப்படுகின்றது.