ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் மற்றும் பார்லிமென்ட் அவைகளுக்கு வெளியே நேற்று முன்தினம் ஐ.எஸ்.ஐ., என்கிற அமைப்பு நடத்திய தாக்குதல் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான்கு பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் இருந்து மலையாள நடிகர் அனூப் மேனன் என்பவர் அதிர்ஷ்டவசமாக தப்பிய விபரம் இப்போது வெளியாகி உள்ளது.
மலையாள திரையுலகில் பிரபல நடிகர் தான் அனூப் மேனன். ஹீரோவாக மட்டுமல்லாமல், குணச்சித்திர வேடங்களிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவர் ஒரு கதாசிரியரும் கூட. கடந்த வருடத்தில் பிருத்விராஜின் 'பாவாட', மோகன்லாலுடன் 'கனல்' மற்றும் இந்த வருடம் வெளியான 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' ஆகிய முக்கிய படங்களில் நடித்துள்ளார் அனூப் மேனன்.
இவர் லண்டனுக்கு சில நாட்களுக்கு முன்புதான் சுற்றுலா கிளம்பி சென்றாராம். புதன்கிழமை அன்று சம்பவம் நடப்பதற்கு கால்மணி நேரம் முன்பு தான் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் பகுதியை சுற்றிப்பார்த்துவிட்டு சென்றாராம். அந்தப்பகுதியை விட்டு நான்கைந்து கி.மீ கூட போயிருக்காத நிலையில் தான், திடீரென போலீஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் எதிர் திசையில் வெஸ்ட்மினிஸ்டர் பாலம் நோக்கி விரைவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரிக்க, அப்போதுதான் இந்த தாக்குதல் சம்பவம் தெரியவந்ததாம். தான் மயிரிழையில் தப்பியதை நினைத்து அவருக்கு அதிர்ச்சி விலகவே சில நிமிடங்கள் பிடித்ததாம்.