ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கஞ்சே, கௌதமிபுத்ர சடர்கனி போன்ற தரமான படங்களை இயக்கிய இயக்குனர் க்ரிஷ் இதில் கஞ்சே படத்திற்கு சிறந்த பிராந்திய படத்திற்கான தேசிய விருதையும் பெற்று தந்தவர். இந்நிலையில் இயக்குனர் க்ரிஷ் மெகா ஸ்டார் சிரஞ்சீவியைச் சந்தித்து தான் தயார் செய்துள்ள கதையைக் கூறியுள்ளார். கதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த சிரஞ்சீவி மேலும் சில மாற்றங்களுடன் முழுதிரைக்கதை அமைத்து தன்னை அணுகும்படி க்ரிஷிடம் கூறியுள்ளாராம். இதனால் உற்சாகமடைந்த க்ரிஷ், திரைக்கதை அமைக்கும் பணிகளை தற்போதே துவங்கி விட்டார். தனது 150 திரைப்படமாக கைதி நம்பர் 150 படத்தில் நடித்த சிரஞ்சீவி அடுத்து நடிக்கவிருக்கும் படத்தை இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.