மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
மலையாள ஜனப்ரிய நாயகன் திலீப்பை பொறுத்தவரை கிறிஸ்துமஸ் பண்டிகை, சித்திரை விஷு இரண்டுமே அவருக்கு தனது படங்களை ரிலீஸ் செய்ய ராசியான சீசன்கள்.. அந்தவகையில் கடந்த 2015 கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியான '2 கண்ட்ரீஸ்' மற்றும் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'கிங் லையர்' (ஏப்-2) ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்.. அதனால் தான் தற்போது தான் நடித்துள்ள 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படத்தை சித்திரை விஷு கொண்டாட்டமாக, அதேசமயம் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக மார்ச்-30ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்..
ஆனால் அதிலும் ஒரு சிக்கல் எழுந்தது.. ஆம்.. மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' படம் வரும் மார்ச்-30ஆம் தேதி வெளியாகிறது. அதை தொடர்ந்து அடுத்த வாரம், அதாவது ஏப்-7ஆம் தேதி மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணியில் உருவாகியுள்ள '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' படம் தியேட்டர்களில் சீட் போட்டுவிட்டது.. இரண்டுமே எதிர்பார்ப்புள்ள படங்கள் என்பதால் அந்த படங்களுடன் இணைத்து தனது படத்தை வெளியிட்டால் நிச்சயம் வசூலில் அடிவாங்கும் என்பதால் இரண்டு நாட்கள் கழித்து ஏப்-1ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறார். அதற்குள் மம்முட்டியின் படம் இரண்டுநாள் ஓடிவிடும் என்பதால் கொஞ்சம் ரிலாக்சாக இருக்கலாம் என்பது திலீப்பின் திட்டம். முட்டாள்களின் தினமான ஏப்-1ல் படத்தை ரிலீஸ் செய்யும் திலீப்பின் முடிவு புத்திசாலித்தனமானது என்றே விநியோகஸ்தர்கள் பேசிக்கொள்கிறார்களாம்.