பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி, தற்போது தொடர் தோல்விகளால் மனம் நொந்து கிடக்கிறார்.. ரான் பேபி ரன்' படஹ்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப்பிறகு மோகன்லாலை வைத்து அடுத்தடுத்து அவர் இயக்கிய 'லோக்பால்' மற்றும் 'லைலா ஓ லைலா' இரண்டுமே தோல்விப்படங்களாக அமைந்துவிட்டன. இருந்தாலும் மோகன்லால்-ஜோஷி கூட்டணி இப்போது புதிய படத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. இதற்கான ஸ்டெப்பை மோகன்லாலே எடுத்துள்ளார். காரணம் ஜோஷி போன்ற இயக்குனர்கள் சோர்ந்துவிடக்கூடாது என்பதுதான் மோகன்லாலின் எண்ணம்.
கடந்த சில வருடங்களாக எதுவும் பெரிய ஹிட் கொடுக்காததால், அடுத்து தாங்கள் இருவரும் இணையும் படம் இழந்த பார்மை மீட்டுத்தரவேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜோஷி ஸ்கிரிப்ட்டை தயார்செய்து வருகிறாராம். அதற்காகவே தனது வழக்கமான கதாசிரியர்களை விட்டுவிட்டு, 'புலி முருகன்' சூப்பர்ஹிட் படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவுடன் கூட்டணி அமைத்துள்ளாராம் ஜோஷி. மோகன்லால் தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்ததும் விரைவில் இந்தப்படம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.