ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவிடம் கே.எஸ்.ரவிக்குமார் கூறிய கதை பிடித்துப்போனதால் உடனடியாக படத்தின் வேலைகளை துவங்கச்சொல்லி விட்டாராம் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரை உலகிற்கு ஏற்ற பக்கா கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் மூன்று நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும் அவர்களுக்கான தேடலில் கே.எஸ்.ரவிக்குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. நடிகை தமன்னா மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வாலிடம் இப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னதாகவே ப்ரீபுரொடக்ஷன் வேலைகளை கே.எஸ்.ரவிக்குமார் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.