சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
டோலிவுட்டின் முன்னணி நடிகையான ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுடன் துருவா படத்திற்கு பின்னர் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சம்பவாமி யுஹே யுஹே என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. சாய் தரண் தேஜுடன் இணைந்து ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள வின்னர் திரைப்படம் பிப்ரவரி 24ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் ப்ரீத்தி சிங்கிடம் மகேஷ் பாபுவுடன் நடிப்பது குறித்து கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் ப்ரீத்தி சிங், மகேஷ் பாபு எளிமையானவர், நேரம் தவறாதவர். படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு வருவது அவரது சிறப்புகளில் ஒன்று. மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் ப்ரீத்தி சிங் பதிலளித்துள்ளார். மேலும் இப்படத்தில் மகேஷ் பாபு புதுவித கெட்டப்பில் நடித்துள்ளதாகவும் ராகுல் ப்ரீத்தி சிங் தெரிவித்தார்.