ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் இருந்து இறக்குமதியான, சுருட்டை முடி அழகி, அனுபமா பரமேஸ்வரனை, கொடி படத்துக்கு பின், ஒரு தமிழ் படத்தில் கூட பார்க்க முடியவில்லை. இதுகுறித்து, கோடம்பாக்கத்தில் விசாரித்தால், அம்மணிக்கு, தமிழ் படங்களில் நடிக்க, அவ்வளவு ஆர்வம் இல்லை என்கின்றனர். அவரது முழு கவனமும், தற்போது தெலுங்கு படங்களில் தான் உள்ளது. ஷதமனம் பவதா என்ற படத்தில், சர்வானந்த் ஜோடியாக நடிக்கிறார். இந்த படம், பொங்கலன்று திரைக்கு வருகிறது. இதுவரை தெலுங்கில், அவர் இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவற்றில், இரண்டாவது ஹீரோயின் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. இந்நிலையில், ஷதமனம் பவதா படத்தில், முதல் முறையாக, பிரதான ஹீரோயினாக நடித்து உள்ளார். இதுதவிர, எவடு ஒக்கடு என்ற படத்திலும் நடிக்கிறார். இதனால், இப்போதைக்கு தமிழ் படங்கள் வேண்டாமே என, கோலிவுட்டில் இருந்து பேசும் தயாரிப்பாளர்களிடம் உதட்டை பிதுக்குகிறாராம் அனுபமா.