சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள சினிமாவில் இஹற்கு முன்னரும் கூட தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சின்னச்சின்ன சச்சரவுகள் ஏற்பட்டு அதனால் தியேட்டர்கள் வேலை நிறுத்தமும் நடைபெற்றதுண்டு.. ஆனால் அவை ஒருசில நாட்களில் முடிவுக்கு வந்துவிடும்.. ஆனால் இந்தமுறை தியேட்டர்கள் அதிக பங்குத்தொகை கேட்டு புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுற போகிறது.. ஸ்ட்ரைக் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. சில தினங்களுக்கு முன் கேரள முதல்வர் பினராயி விஜயன் இதில் தலையிட்டு, புதிதாக விசாரணை கமிஷன் அமைக்கும் வரை பழைய முறை தொடரட்டும் என்றார்..
இதற்கு தியேட்டர் எக்சிபிடர்ஸ் பெடரேஷன் சார்பில் சம்மதித்தாலும், அவர்களால் காயம் பட்ட தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ளவில்லை. எக்சிபிடர்ஸ் சங்கத்தில் இல்லாத தியேட்டர்களாக, அதாவது பில் கிளாஸ் தியேட்டர்களாக தேடிப்பிடித்து தங்களது படங்களை திரையிட முடிவு செய்துள்ளனர்.. இது ஒருபக்கம் இருக்க, கேரள திரைப்பட வளர்ச்சி கழகம் கேரள மாநிலம் முழுவதுமாக மொத்தம் நூறு தியேட்டர்களை புதிதாக நிர்மாணிக்க தீர்மானித்துள்ளது.