பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
இந்தமுறை கேரளாவில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டும்போலத்தான் தெரிகிறது. ஆரம்பத்தில் முதல் ஆளாக துல்கர் சல்மான் நடித்துள்ள 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டது.. இந்தப்படத்தை இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஹனீப் அதேனி என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள 'தி கிரேட் பாதர்' கிறிஸ்துமஸ் ரிலீஸாக அறிவிக்கப்பட்டு, பின்னர் ஜன-27க்கு பின் வாங்கியது... அதேபோல திலீப்பின் 'ஜார்ஜேட்டன்ஸ் பூரம்' படமும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டது.
அதேசமயம் 'வெள்ளிமூங்கா' ஹிட் பட இயக்குனரான ஜிபு ஜேக்கப் டைரக்சனில் உருவாகி இருக்கும் மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படமும் பிருத்விராஜின் ஹாரர் த்ரில்லரான 'எஸ்ரா' படமும் இணைந்து மும்முனை போட்டி என்கிற சூழலை உருவாகின. இப்போது லேட்டஸ்ட்டாக சித்திக் டைரக்சனில் ஜெயசூர்யா நடித்துள்ள 'பக்ரி' படமும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ரிலீஸாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. ஆக கிறிஸ்துமஸ் பண்டிகையில் நான்கு முனைப்போட்டி என்பது இப்போதே உறுதியாகியுள்ளது.