ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவின் வசூல் சரித்திரத்தையே மாற்றி எழுதிய 'புலி முருகன்' படம் இன்று சுமார் 100 தியேட்டர்களில் 50வது நாளை கடந்துள்ளது. இந்த 50 நாட்களில் சுமார் 125 கோடி வசூலித்து, மலையாள சினிமாவின் வியாபார எல்லையை உலகளவில் விரிய வைத்திருக்கிறது இந்தப்படம்.. 56 வயதான மோகன்லால் இந்த வயதிலும் கூட இப்படியெல்லாம் அதிரடி சாகசங்கள் பண்ணுவாரா என மற்ற இளம் நடிகர்களையும், ஏன் மொத்த மலையாள திரையுலகத்தையும் வாய்பிளக்க செய்து விட்டது 'புலி முருகன்'.. அதுமட்டுமல்ல இந்தப்படத்தின் இயக்குனர் வைசாக்கை ஒரே தூக்காக தூக்கி உச்சாணி கொம்பில் உட்கார வைத்துவிட்டது.
இந்தப்படம் நூறாவது நாளை தொடும்போது, இந்தப்படம் தகர்த்தெறிந்த மற்றும் புதிதாக படைத்த சாதனைகளின் எண்ணிக்கையும் 100ஐ தொடும் என பிரமிப்பு மாறாமல் சொல்கிறார்கள் இந்தப்படத்தின் விநியோகஸ்தர்கள்.. சிறுவர்களை பள்ளிக்கூடங்களில் இருந்தே அவர்களது ஆசிரியர் குழு அழைத்து வந்து இந்தப்படத்தை காண்பிக்கும் நிகழ்வுகளும், ஓரிரு வயதே நிரம்பிய சுட்டிக்குழந்தைகள் கூட தங்களை 'புலி முருகன்' ஆக நினைத்துக்கொண்டு ரகளை செய்து வரும் வீடியோக்களும் பல வருடங்கள் கழித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான ஒரு 'மாஸ்' படம் என்பதைத்தான் சொல்லாமால் சொல்கின்றன.