ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தற்போது கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் பிணராயி விஜயன்.. சினிமா துறையின்பால் கொஞ்சம் ஈடுபாடு உள்ளவர்தான்.. அதனால்தான் இளையராஜா இசையமைத்த மலையாள திரைப்படத்தின் இசைத்தகட்டை வெளியிடும் நிகழ்ச்சியில் கூட சமீபத்தில் கலந்துகொண்டார் பிணராயி விஜயன். இப்போது லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சமீபத்தில் வெளியான மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளார் கேரள முதலமைச்சர்..
மோகன்லாலின் 'புலி முருகன்' படம் வாய்மொழியாக அனைத்து மக்களிடமும் 'சூப்பர் படம்' என்கிற பேச்சை உருவாக்கி விட்டது. சாதாரண மக்களில் ஆரம்பித்து அரசியல் தலைவர்கள் வரை புலி முருகன் ஜுரம் பரவிவிட்டது. சமீபத்தில் கூட முன்னால் காங்கிரஸ் தலைவரான கே..சி.அபு என்பவர் இப்போதைய முதலமைச்சர் பிணராயி விஜயனை 'புலி முருகன்' என்றும் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியை 'தோப்பில் ஜோப்பன்' (மம்முட்டி நடித்த படம்) என்று குறிப்பிட்டார்.
நம்மை 'புலி முருகன்' ரேஞ்சுக்கு எதிர்க்கட்சிக்காரரே தூக்கிவைத்து பேசுகிறார் என்றால் 'புலி முருகன் ' படத்தில் அப்படி என்னதான் இருக்கும் என்கிற ஆவல் முதல்வருக்கு எழுந்தது.. இதனால் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து தனது மனைவி கமலாவுடன் இந்தப்படத்தை பார்த்துவிட்டு பிரமிப்புடன் வெளியே வந்த முதல்வர், படத்தையும் மோகன்லாலையும் வெகுவாக பாராட்டி பேசிவிட்டே வீட்டிற்கு கிளம்பினாராம். பிணராயி விஜயன் முதல்வர் பொறுப்பை ஏற்றபின் இத்தனை மாதங்கள் கழித்து பார்க்கும் முதல் படம் 'புலி முருகன்' தானாம்.