ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக முன்னணி நடிகர்கள் தங்களது படங்கள் ரிலீஸ் ஆகும்போது அவற்றை திரையுலக பிரபலங்களுக்காக பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காண்பிப்பது வழக்கம். இதில் முன்னணி நடிகர்களில் ரஜினி, விஜய், அஜித் போன்ற முக்கியமானவர்கள் இந்த பிரிமியர் ஷோவில்கூட கலந்து கொள்வது இல்லை. தானும் தனது குடும்பத்தாரும், நண்பர்களும் சூழ தங்கள் வீட்டில் உள்ள தியேட்டரிலோ அல்லது பிரிவியூ தியேட்டரிலோ தங்களது படத்தை தனியாக பார்த்துக் கொள்வார்கள். இதுநாள் வரை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலும், இந்து முறையைத்தான் பின்பற்றி வந்தார்.
ஆனால் இதில் சிறிய.. இல்லையில்லை பெரிய மாற்றமாக, தற்போது தான் நடித்து வரும் புலிமுருகன் படத்தை, ரிலீஸ் நாளன்று (அக்-7) கேரளாவில் உள்ள ஏதாவது ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் ரசிகராக அமர்ந்து பார்க்க முடிவு செய்துள்ளாராம். மோகன்லால் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினரும், அவரது நண்பர்களும் அதில் அடக்கம். இதுவரை இல்லாத அளவில் மோகன்லால் நடிப்பில் மெகா பட்ஜெட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை நேரில் பார்த்து ரசிக்க மோகன்லால் விரும்பியதே இதற்குக் காரணமாம்.