ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜான் ஆப்ரஹாம். இதுவரை இந்தி தவிர மற்ற மொழிகளில் நடித்திராத ஜான் ஆப்ரஹாம் அடுத்ததாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைக்க இருக்கிறாராம். ஒரு நடிகராக ஏற்கனவே ஒரு மலையாள படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஜான் ஆப்ரஹாம் மிக முக்கியமாக குறி வைத்திருப்பது மலையாளப் படங்களை தயாரிப்பதுதானாம். அந்தவகையில், அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம்.
திடீரென ஜான் ஆப்ரஹாமுக்கு மலையாள திரையுலகப்பக்கம் ஆர்வம் திரும்பியது எதனால் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம். காரணம் ஜான் ஆப்ரஹாம் பிறப்பால் ஒரு மலையாளி. ஆம், அவரது தந்தை கேரளா மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்தவர். அவரது தாய் மும்பையைச் சேர்ந்தவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனதால், ஜான் ஆப்ரஹாமின் படிப்பு, சினிமா அனைத்துமே மும்பையிலேயே அமைந்து விட்டது. அவரும் மும்பைவாலாவாகவே மாறிவிட்டார். இருந்தாலும் தந்தையின் பூர்வீகம் கேரளா என்பதால் தன்னை ஒரு மலையாளியாகவும் காண்பித்துக் கொள்ள ஜான் ஆப்ரஹாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிதான் இது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.