ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்னும் என்னென்ன ஆச்சர்யங்களைத்தான் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் கொடுக்க இருக்கிறாரோ தெரியவில்லை. ஆனால் தற்போது தான் நடித்துள்ள 'புலி முருகன்' படத்திற்காக அவர் செய்துள்ள செயல் ஒன்று மற்ற அனைத்து நடிகர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம். மோகன்லால் நடித்துள்ள படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் என்றால் அது புலி முருகன் தான். அதனால் தான் வழக்கமாக தன்னுடைய படங்களுக்கு தரும் கால்ஷீட் போல இரண்டு மடங்கு கால்ஷீட்டை இந்தப்படத்திற்காக ஒதுக்கி தந்தார் மோகன்லால்.
அதைவிட ஆச்சர்யம் என்னவென்றால், ஒரு நாள் கூடுதலாக ஆனாலும் எக்ஸ்ட்ரா சம்பளம் கேட்கும் நடிகர்கள் மத்தியில் ஒரு படத்திற்கான கால்ஷீட்டையே எக்ஸ்ட்ராவாக கொடுத்த மோகன்லால் அதற்காக அதிக சம்பளம் கேட்கவில்லை. மாறாக தான் வழக்கமாக வாங்கும் சம்பளத்திலும் பாதியை குறைத்துக்கொண்டுதான் வாங்கியிருக்கிறாராம். இதற்கு காரணம் 'புலி முருகன்' படம் மோகன்லாலை ரொம்பவே கவர்ந்து விட்டதுதான். மேலும் தயாரிப்பாளருக்கு தானும் சுமையை ஏற்றக்கூடாது என்கிற நல்ல எண்ணமும் காரணம்.. தங்களது சம்பளத்தை கூட்டலாமா வேண்டாமா என யோசித்துக்கொண்டு இருந்த மற்ற நடிகர்கள் மோகன்லாலின் செயலைக்கண்டு அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போயுள்ளார்களாம்.