மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
அதோ இதோ என மலையாள தேசத்து சினிமா ரசிகர்களால் மட்டுமல்லாமல் திரையுலகத்தாலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது மகன் ப்ரணவ் மோகன்லாலின் சினிமா பிரவேசத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.. ஆம்.. தனக்கு 'த்ரிஷயம்' என்கிற மாபெரும் ஹிட் மூலம் வெற்றி மகுடம் சூட்டிய ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக மகனை அறிமுகப்படுத்துகிறார்.
மோகன்லாலின் ஆசீர்வாத் சினிமா நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது. 'த்ரிஷ்யம்' போல இதுவும் ஒரு த்ரில்லர் படமாக உருவாக்க இருக்கிறதாம். இந்த தகவல்கள் அனைத்தையும் இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக இதை உறுதி செய்துள்ளார் மோகன்லால்.
இந்த செய்தி ஒரு பக்கம் சந்தோஷத்தையும் இன்னொரு பக்கம் வியப்பு கலந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் மோகன்லாலின் மகன் ப்ரணவ், இதுநாள் வரை தனக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் டைரக்சன் தான் தனது இலக்கு என்றும் சொல்லி வந்தார். அதற்கேற்ற மாதிரி கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் ஜீத்து ஜோசப் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியும் வந்தார் ப்ரணவ். அவர் தனியாக படம் இயக்குவதற்கான முழுத்தகுதியும் பெற்றுவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பு ஜீத்து ஜோசப்பே கூறியிருந்தார்.. இந்தநிலையில் மகனை திடீரென மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கும் படத்திலேயே ஹீரோவாக களமிறக்குவது ஆச்சர்யமில்லாமல் வேறென்ன..?