ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட் நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, விஜய், அஜித், சூர்யா போன்ற தமிழ் நடிகர்களின் படங்கள் கேரளாவில் பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்து வருகின்றன. மேலும், சூர்யா-கார்த்தி, விஷால் ஆகியோர் நடிக்கும் படங்களுக்கு சமீப காலமாக ஆந்திராவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர்களில் சூர்யாதான் ஆந்திராவில் முன்னணியில் இருக்கிறார். விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 படம் தமிழ்நாட்டை விட ஆந்திராவில்தான் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்த நிலையில், விக்ரம் நடித்து வெளியான இருமுகன் படம் முதன்முறையாக ஆந்திராவில் அதிகமாக வசூலித்துள்ளதாம். அதனால் இதுவரை தமிழ் தவிர மற்ற மொழி ரசிகர்களைப்பற்றி பெரிதாக யோசிக்காத விக்ரம், இப்போது நேரடி தெலுங்கு படங்களில் நடிக்கவும் முடிவெடுத்துள்ளாராம். அடுத்தபடியாக ஹரியின் சாமி-2 படத்தில் நடிப்பதற்கு முன்பே ஒரு தெலுங்கு படத்தில் அவர் கமிட்டாகி விடுவார் என்று தெரிகிறது.