ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் சூப்பர் ஹிட்டான தனி ஒருவன் திரைப்படம் தெலுங்கில் துருவா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் ராம் சரண், நவ்தீப், நாசர், அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிக்க நாயகியாக நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்கின்றார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் தயாரிக்கும் இத்திரைப்படம் அக்டோபர் 7ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாகசைதன்யாவின் பிரேமம் தெலுங்கு ரீமேக் திரைப்படம் அக்டோபர் முதல் வாரத்தில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் துருவா படத்தின் வெளியீட்டை ஒத்தி வைத்திருப்பதாக டோலிவுட்டில் தகவல் பரவியது. ஆனால் அல்லு அரவிந்த் இத்தகவலை மறுத்துள்ளார். துருவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளாதாக வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்தியே எனறும் அறிவித்தபடி அக்டோபர் 7ல் துருவா திரைக்கு வரும் என்றும் அல்லு அரவிந்த் தெளிவுபடுத்தியுள்ளார்.