ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நஸ்ரியா, மீண்டும் நடிக்க வருவதாக கடந்த வருடம் முழுதும் செய்திகள் அடிபட்டன. அவரது கணவர் பஹத் பாசிலும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால் அவரோ வந்தபாட்டை காணோம்.. அவர் மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கி கிடந்த அவரது ரசிகர்கள் இப்போதும் அதே மனநிலையில் தான் இருக்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.. அதற்கு உதாரணமாக பேஸ்புக் பக்கத்தில் அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை சொல்லலாம்.
நஸ்ரியா பீக்கில் இருந்த காலகட்டத்தில் பேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் அவரை பின் தொடர்ந்தனர்.. ஆனால் இன்று அது படிப்படியாக 75 லட்சத்து 23 ஆயிரமாக குறைந்துவிட்டது. அதேசமயம் நடிகை மியா ஜார்ஜை பேஸ்புக்கில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 75 லட்சத்து 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.. நஸ்ரியாவை விட 33 ஆயிரம் பேர் அதிகமாக மியாவை பின் தொடர்கின்றனர். மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து மியா பாப்புலராகிவிட்டதால் நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது. விரைவில் அவர் தெலுங்கிலும் நுழைய இருப்பதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்பு நிறைய இருக்கிறது.