இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

படப்பிடிப்புக்கு ஒதுக்கும் நேரம் போக, மீதியுள்ள ஒய்வு நேரங்கில் சமூக பொறுப்புள்ள நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நேரம் ஒதுக்கி அவற்றில் கலந்துகொள்பவர் மலையாள நடிகர் திலீப்.. அப்படித்தான் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திலீப்பை கண்ணீர் உகுக்க வைத்திருக்கிறது அங்கே பேசியவரின் பேச்சு.. கேரளாவில் மனநலம் பாதிக்கப்பட்டு தெருவில் சுற்றித்திரியும் பெண்களுக்கு அடைக்கலம் தரும் விதமாக 'ஸ்னேகதீரம்' என்கிற அமைப்பு திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வாமனபுரம் அருகில் உள்ள மித்ரமலை என்கிற இடத்தில் மறுவாழ்வு மையத்தை நிறுவியுள்ளது. இதன் துவக்க விழாவில் கலந்துகொள்ள திலீப்பிற்கு அழைப்பு அனுப்ப, அவரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் இந்த அமைப்பின் தலைவியான ரோஸ்லின் என்பவர் பேசும்போது, தெருவில் மனநலம் குன்றியவாறு சுற்றித்திரியும் பெண்கள் எவ்வாறு சமூக விஷமிகளின் காம இச்சைக்கு பலியாகின்றார்கள், அதனால் கர்ப்பமும் அடைந்து, குழந்தைகளையும் பெற்றுகொண்டு எப்படி நிர்க்கதியாக விடப்படுகிறார்கள் என்பதை விளக்கி பேசினார். இதை கேட்க கேட்க திலீப்பின் கண்களில் அவரையும் அறியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.. சற்றுநேரம் வரை தனது கைக்குட்டையால் கண்ணீரை துடைத்தபடியே இருந்த திலீப், தான் பேசும்போது, இந்த அமைப்பினர் எந்த உதவி கேட்டாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் தன்னை தடையின்றி அணுகலாம் எனவும் கூறியுள்ளார்.