ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நேற்றைய தினம் மலையாள நடிகர் சங்கம் (AMMA) தனது பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. நடிகர்சங்கத்தலைவரும் நடிகரும் எம்.பியுமான இன்னொசன்ட் தலைமையில் கூடிய இந்தக்கூட்டத்தில் மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப் உள்ளிட்ட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். ஆனால் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களான தேசியவிருது பெற்ற நடிகர் சலீம் குமார் மற்றும் சமீபத்தில் பத்தனாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஜெகதீஷ் ஆகிய இருவரும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்..
நடிகரும் எம்.எல்.ஏவுமான கணேஷ்குமாரை (படத்தில் மோகன்லாலின் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்) ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த மோகன்லாலின் செயலை கண்டித்து நடிகர்சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்தார் சலீம்குமார். அதனால் அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகர் ஜெகதீஷுக்கும் கிட்டத்தட்ட இதே காரணம் தான்.. மோகன்லால் தனது நண்பர் தான் என்றாலும், தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட கணேஷ்குமாருக்கு ஆதரவாக மோகன்லால் பிரச்சாரம் செய்ததால் மன வருத்தத்தில் இருந்ததாலும், தனக்கு ஆதரவாக பேசிய சலீம்குமாரே ராஜினமா செய்துவிட்டதாலும் தான் மட்டும் எதற்காக நடிகர்சங்க கூட்டத்திற்கு போகவேண்டும் என வருகை தராமல் இருந்துவிட்டதகவும் சொல்லப்படுகிறது.