சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
நடிகர் கலாபவன் மணியின் உடல்கூறு ஆய்வு அறிக்கையை ஐதராபாத் தடயவியல் துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர். அதில், கலாபவன் மணி குடிந்த மதுபானத்தில் மீத்தைல் ஆல்கஹால் என்ற விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலந்திருந்ததே அவரது மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரசாயன பொருள் மெதுவாக கொல்லும் தன்மை கொண்டது எனவும், குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்த ரசாயனம் கொடுக்கப்பட்டதாலேயே கலாபவன் மணி உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் வெளியிடப்பட்ட இரண்டு உடற்கூறு ஆய்வு அறிக்கைகளில் ஒன்றில் கலாபவன் மணி பூச்சி மருந்து கொடுத்து கொல்லப்பட்டுள்ளதாகவும், மற்றொன்றில் மீத்தைல் ஆல்கஹால் கொடுத்தே கலாபவன் மணி கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த குழப்பத்தை தீர்ப்பதற்காகவே கேரள போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் ஐதராபாத் தடயவியல் ஆய்வாளர்கள் மீண்டும் ஆய்வு செய்தனர். இதில் விஷதன்மை கொண்ட ரசாயன பொருள் கொடுத்து கலாபவன் கொல்லப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.