ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு பக்கம் நயன்தாராவின் கால்ஷீட் கேட்டு ஆந்திர ஹீரோக்கள் நடையாக நடந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கால்ஷீட் வாங்கி படப்பிடிப்பை ஆரம்பித்த நடிகர்களோ எதற்கு நயன்தாராவை நடிக்க அழைத்தோம் என்று நொந்து போய் இருக்கிறார்களாம். தெலுங்கில் நயன்தாராவுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் 'ஸ்ரீராமராஜ்யம்' படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்த பிறகு அவருடைய இமேஜ் பல மடங்கு கூடியது. சிரஞ்சீவி படம் வரை நயன்தாராவிடம் கால்ஷீட் கேட்டுப் பார்த்துவிட்டார்கள்.
எப்படியோ வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் 'பாபு பங்காரம்' என்ற படத்தில் நயன்தாராவின் கால்ஷீட்டை வாங்கி படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆனால், நயன்தாரா கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் தவிக்க வைத்திருக்கிறார். அவரின் இந்த பொறுப்பின்மையைப் பார்த்து சீனியர் ஹீரோவான வெங்கடேஷ் கடும் எரிச்சல் அடைந்தாராம். படத்தை முடித்து கோடை விடுமுறையிலேயே வெளியிட திட்டமிட்டிருந்தார்கள்.
ஆனால், நயன்தாராவால் அடிக்கடி படப்பிடிப்பு தள்ளிப் போனதால் படத்தைத் திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லையாம். இப்போது ஜுலையில் படத்தை வெளியிடலாம் என்று பார்த்தால் 'கபாலி' வருவதாகச் சொல்கிறார்களே, எப்படி படத்தை வெளியிடுவது என்று முழித்து வருகிறார்களாம். எல்லாம் நயன்தாராவால் வந்த வினை என 'பாபு பங்காரம்' குழுவினர் பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம்.