ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்நாட்டில் தான் வெயில் கொளுத்துகிறது என கேரளா பக்கம் போகலாம் என நினைத்தால் இந்தமுறை அங்கேயும் வெயிலின் தாக்கம் அதிகமாகியுள்ளது. குறிப்பாக பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் வறட்சியை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். படப்பிடிப்புக்காக சில இடங்களுக்கு சென்ற மலையாள மெகாஸ்டார் மம்முட்டி, பொதுமக்கள் தண்ணீர் பஞ்சத்தால் இந்த வெயில் காலத்தை சமாளிக்க சிரமப்படுவதை பார்த்தார். இவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே என அவர் நினைத்தபோது உதித்த திட்டம் தான் 'ஓன் யுவர் வாட்டர்' திட்டம்..
இதன்படி கொச்சி அருகில் உள்ள கல்லூரில் இந்த திட்டத்திற்கான துவக்க விழாவை ஆரம்பித்து வைத்தார் மம்முட்டி. இந்த திட்டத்தின் பலனாக தண்ணீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வாட்டர் டேங்குகளை வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சமையல் உளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் சரிவர கிடைக்காமல் அல்லாடிய நெல்லுக்கடவு கிராமத்தில் 5000 லிட்டர் கொள்ளளவு உள்ள வாட்டர் டேங்கை முதன்முதலாக நிறுவி, இடைவிடாது தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார் மம்முட்டி.
இப்போது அந்த கிராமத்தில் எந்நேரமும் தண்ணீர் கிடைப்பதால் 'மகராசன் நல்லா இருக்கனும்' என மம்முட்டியை பாராட்டி வருகிறார்கள் கிராமத்து மக்கள்.. இதுதவிர நகரின் முக்கிய பகுதிகளில் வாட்டர் டேங்குகள் வைக்கவும் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்கவும் மம்முட்டி அறிவுறுத்தி உள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய சிறப்பம்சம் என்னவென்றால் ஒரு நடிகரான மம்முட்டி இந்த திட்டத்தை ஆரம்பிப்பதா என்கிற காழ்ப்புணர்ச்சி எல்லாம் இல்லாமல், கேரள முதல்வர் உம்மன் சாண்டி இந்த திட்டத்திற்கு வேண்டிய உதவிகளை தடையிலாமல் செய்துகொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம்.