ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள நடிகர் ஜினு ஜோசப், மிகப்பெரிய நடிகர் இல்லாவிட்டாலும் கூட ஓரளவு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் நடிகர்தான்.. சில தினங்களுக்கு முன் இவர் நியூயார்க்கில் இருந்து அபுதாபிக்கு ஒரு தனியார் விமானத்தில் சென்றுள்ளார்... எகனாமி வகுப்பில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அவர், தனது இருக்கைக்கு முனே ஓடும் டிவியை அணைக்க சொல்லியுள்ளார்.. ஆனால் விமான பணியாளரோ அதை அணைக்காமல் ஒரு துணியை கொண்டு மறைத்துள்ளனர்..
இதனால் அதிருப்தி அடைந்த ஜினு ஜோசப், பணியாளர்களின் பேச்சுக்களையும் அவர்களது செயல்பாட்டையும் வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார். கடுப்பான விமான ஊழியர்கள் அவரிடம் இருந்த வீடியோவை கைப்பற்றியதோடு விமானம் தரையிறங்கியதும் ஏர்போர்ட்டிலேயே அவர் கைது செய்யப்படுவார் என அவரை மிரட்டவும் செய்துள்ளார்கள்.. சொன்னபடியே ஏர்போர்ட்டில் வைத்து கைதும் செய்யப்பட்டார் ஜினு ஜோசப்.
பின்னர் ஒருவழியாக விசாரணையில் தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து விடுதலையாகி கொச்சி திரும்பியுள்ளார் ஜினு ஜோசப். இந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவுடன் ,நடந்தது என்ன என டீடெய்லாக பதிவிட்டும் உள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட விமான சேவை அதிகாரிகளோ, ஜினு ஜோசப் தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதால் தான் கைது செய்யப்பட்டார் என்றும், அதன்பின் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு அதை கைப்பட எழுதியும் கொடுத்தபின்னர் தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.