ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த வருடம் மலையாள சினிமாவை தரம், வசூல் என புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றுதான் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படமான 'என்னு நிண்டே மொய்தீன்'.. ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கிய இந்தப்படத்தில் பார்வதி கதாநாயகியாக நடித்திருந்தார்.. கோழிக்கோடு முக்கம் பகுதியில் வாழ்ந்த மொய்தீன்-காஞ்சனமாலா என்கிற ரியல் காதல் ஜோடியை பற்றிய உண்மைக்கதையே 'என்னு நிண்டே மொய்தீன்' என்கிற பெயரில் தயாரானது.. இந்தக்கதையின் உண்மை நாயகியான காஞ்சனமாலா இன்னும் உயிருடன் மொய்தீன் நினைவாகவே திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..
மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தின் முந்தைய பாகத்தை தயாரிக்க இப்போது மொய்தீனின் சகோதரர் ரபீக் முடிவுசெய்துள்ளாராம்.. முதல் பாகத்தில் மொய்தீன்-காஞ்சனாமாலா காதல் மட்டுமே பிரதான இடம்பெற்றிருந்தது.. ஆனால் இந்த முந்தைய பாகத்தில் மொய்தீனின் அரசியல், சமூக செயல்பாடுகள் பிரதான இடம்பிடிக்கும் என சொல்லப்படுகிறது. 'மொய்தீன்' படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல், தற்போது பிருத்விராஜை வைத்து 'கர்ணன்' என்கிற மெகா பட்ஜெட் படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால் இந்தப்படத்தை வேறு இயக்குனரை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார்களாம்.. கிட்டத்தட்ட தமிழில் வெளியான அஜித்தின் 'பில்லா-2' போலத்தான். ஆனால் கதாநாயகன்-நாயகியாக பிருத்விராஜ்-பார்வதி நடித்தால் மட்டுமே இந்தப்படத்தயாரிப்பை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச்செல்ல முடியும் என்பதால் இருவரிடமும் இதுபற்றி பேசி வருகிறார்களாம்..