ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் 18வது ஆசியாநெட் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மலையாள நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ள நமது சீயான் விக்ரம் மற்றும் த்ரிஷா இருவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். விழாவில் புகழ்பெற்ற தமிழ் நடிகருக்கான விருதை மோகன்லால் கையால் பெற்ற விக்ரம், மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்பது தனது நீண்டநாள் கனவாகவே இருக்கிறது என குறிப்பிட்டார். மேலும் அவர் பேசும்போது, தான் நடித்த படம் ரிலீசாகும் போதேல்லாம், மோகன்லாலின் நடிப்பை சுட்டிக்காட்டி அவரைப்போல வரவேண்டும் என்றால் இன்னும் கொஞ்சம் நடிப்பை இம்ப்ரூவ் பண்ணுங்கள் என தனது மனைவி, சொல்வது வழக்கமாகவே ஆகிவிட்டது என்றும் கூறினார்.
'சேது' மூலம் தமிழில் நிலையான இடத்தை பிடித்த விக்ரம் அதற்கு முன் தனக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத சமயங்களில் மலையாள சினிமா உலகில் அதிக கவனம் செலுத்தி வந்தார். சொல்லப்போனால் அவருக்குள் இருந்த நடிப்புத்தீ அணையாமல் பார்த்துக்கொண்டது மலையாள திரையுலகம் தான். அந்த சமயத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, சுரேஷ்கோபி ஆகியோருடன் இணைந்து சில படங்களில் நடித்த விக்ரமுக்கு மோகன்லாலுடன் மட்டும் இதுநாள்வரை ஒரு படத்தில் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே இருக்கிறது. அந்த ஆதங்கத்தைத்தான் இந்த விழாவில் வெளிப்படுத்திய விக்ரம், மோகன்லாலுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வரும் பட்சத்தில் அதை தவறவிடவே மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.