ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு நடிகையான ஸ்ரீதிவ்யா, தமிழ்ப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு தெலுங்கிற்கு செல்லவில்லை. மீண்டும் தெலுங்கிற்கு சென்றால் ஒரு சரியான படத்தின் மூலமாக செல்ல வேண்டும் என்று தான் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தாராம். அப்படி அவர் காத்திருந்த போதுதான் பெங்களூர் நாட்கள் படவாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் மலையாளத்தில் நஸ்ரியா நடித்த வேடம் என்பதால் அவரது கதாபாத்திரத்தை உள்வாங்கி பிரதிபலித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இதே படத்தில் சமந்தா, ராய் லட்சுமி, பார்வதி என பல நடிகைகள் இருந்தும் தனக்கே லீடு ரோல் என்பதோடு, தன்னை கவர்ந்த ஹீரோவான ராணாவுக்கு ஜோடி என்பதால் இதுவரை எந்த படத்தில் நடிக்கும்போதும் இல்லாத அளவுக்கு அளவற்ற உற்சாகத்துடன் நடித்து வந்தாராம் ஸ்ரீதிவ்யா.
அதோடு, இப்போது ஸ்ரீதிவ்யாவின் நடிப்பை சில முன்னணி டைரக்டர்கள் போன் போட்டு பாராட்டி வருகிறார்களாம். அதனால் தனது கேரியரில் இதை முக்கியமான படமாக கருதும் ஸ்ரீதிவ்யா, ராணாவுடன் நடித்த வேகத்தில் தெலுங்கு சினிமாவின் மற்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். முக்கியமாக, இதுவரை வளர்ந்து கொண்டிருக்கும் ஹீரோக்களுடன் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா, இனிமேல் வளர்ந்து நிற்கும் ஹீரோக்களின் படங்களுக்கு முதலிடம் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.