'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிரபாஸிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்து விட்டவர், சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். கேஜிஎப்- 2 படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்திய பிருத்விராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‛இது பிரபாஸ் படம் நோ சொல்ல முடியாது.. ஓகே சொல்லிட்டேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும், சலார் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுக் கொண்டேன் என்றும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். எத்தனை மொழிகளில் படத்தை வெளியிட்டாலும், அத்தனை மொழிகளிலும் சொந்த குரலிலேயே டப்பிங் பேசி விடுகிறேன். அது சுமராக இருந்தாலும், எத்தனை முறை பேச சொன்னாலும் பேசி நடிக்கிறேன் என சொன்னதும், பிரசாந்த் நீல் சிரித்து விட்டு நீங்க வந்தா மட்டும் போதும் எனக் கூறியிருக்கிறாராம்.