வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று டிசம்பர் 17ம் தேதி வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர்.
4 மொழிகளில் நேற்று வெளியான நிலையில் மலையாளத்தில் மட்டும் படம் வெளியாகவில்லை. படத்தின் மலையாள டப்பிங்கில் 'சின்க்' பிரச்சினை கடைசி நேரத்தில் ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்து படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை. எனவே, படத்தை கேரளாவில் வெளியிடும் நிறுவனம், படம் டிசம்பர் 18ம் தேதிதான் வெளியாகும் என அறிவித்தது.
அதன்படி கேரளா முழுவம் இன்று தான் படம் வெளியாகிறது. பொதுவாகவே அல்லு அர்ஜுன் படங்களுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும், படத்தில் மலையாள நடிகரான பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். எனவே, கேரள வசூலில் இப்படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் நேற்று திட்டமிட்டபடி வெளியாகாத காரணத்தால் முதல் நாள் வசூல் கிடைக்காதது அவர்களுக்கு நஷ்டம்தான்.
இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் கேரளாவில் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கிலும் இப்படம் கேரளாவில் நேற்று வெளியாகி உள்ளது.