கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | எல்லா படங்களுக்கும் கதாநாயகி அவசியம் இல்லை : நிகிலா விமல் | ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி விட்ட பிரபாஸ் | மீண்டும் ஷாரூக்கான் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | ஆளே இல்லாத நடிகர் சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு : அமைச்சரின் பரிந்துரையில் கட்டணமின்றி சலுகை | இளையராஜாவை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் | ஆவேசம் பஹத் பாசில் பாணியில் ரிலீஸ் தேதியை அறிவித்த விஸ்வக் சென் | சூர்யா படத்தில் கதாநாயகியாக இணையும் பூஜா ஹெக்டே | புஷ்பா 2 வில் இருந்து விலகிய எடிட்டர் ஆண்டனி ரூபன் ? | ஜீத்து ஜோசப் டைரக்ஷனில் பஹத் பாசில் படம் அறிவிப்பு |
படம் : அறிந்தும் அறியாமலும்
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : ஆர்யா, பிரகாஷ்ராஜ், நவ்தீப், சமேஷா
இயக்கம் : விஷ்ணுவர்த்தன்
தயாரிப்பு : 'புன்னகை பூ' கீதா
பிரகாஷ்ராஜை தவிர, அதிகம் பிரபலமாகாத ஆர்யா, தெலுங்கு நடிகர் நவ்தீப் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த, அறிந்தும் அறியாமலும் படம், பெரும் வெற்றி பெற்றது. ராம்கோபால் வர்மா, மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகியோருடன் பணியாற்றிய விஷ்ணுவர்த்தன், முதலில் இயக்கிய, குறும்பு படம் வெற்றி பெறவில்லை. அடுத்த படத்தில் கூடுதல் சிரத்தை மேற்கொண்டு, திரைக்கதையில் கவனம் செலுத்தி, அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கினார். இதன் மூலம், கவனிக்கத்தக்க இயக்குனர் பட்டியலில் இடம்பெற்றார்.
பிரபல ரவுடி பிரகாஷ்ராஜின் வளர்ப்பு பிள்ளை, ஆர்யா. கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு படிக்க வரும் நவ்தீப்பின் காதலி சமேஷா. ஆர்யாவிற்கும், எதிர் கோஷ்டிக்கும் நடக்கும் மோதலில், சமேஷா காயமடைகிறார். இந்நிலையில் பிரகாஷ்ராஜின் மகன் தான், நவ்தீப் என தெரிய வருகிறது. பிரகாஷ்ராஜ், தன் மகனை அன்புடன் நெருங்க, அவர் விலகிச் செல்கிறார். இதற்கிடையில் பிரகாஷ்ராஜ், ஆர்யாவை என்கவுன்டர் செய்ய, போலீசார் திட்டமிடுகின்றனர். அனைவரும் ஒரே இடத்தில் நிற்க, 'க்ளைமேக்ஸ்' அரங்கேறுகிறது.
படத்தின் கதாநாயகன், பிரகாஷ்ராஜ் தான். அமைதியான தாதாவாகவும், பாசமான அப்பாவாகவும் அற்புதமாக நடித்திருந்தார். கிராமத்து, அப்பாவி இளைஞனாக நவ்தீப், ரசிக்க வைத்தார். ஆர்யாவிற்கு இப்படம், 'விசிட்டிங் கார்டு' ஆக அமைந்தது. வளரும் ரவுடியாகவும், நவ்தீபிடம் மல்லுகட்டும் அண்ணனாகவும் புன்னகை மலர செய்தார்.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு, படத்தின் வேகத்திற்கு பிரம்மாதமாக ஒத்துழைத்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், 'தீப்பிடிக்க தீப்பிடிக்க...' பாடல், தமிழகம் எங்கும் எதிரொலித்தது. பின்னணி இசையிலும் கலக்கியிருந்தார்.
அறிந்தும் அறியாமலும் ஆச்சரியம் அளித்தது!