அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்தும், நடிகர் ஹிரித்திக் ரோஷனும் ஒரு காலத்தில் நெருங்கி பழகியதுடன், லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் கங்கனாவே கூறியுள்ளார். ஒருகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிர் துருவங்களாக மாறிவிட்டனர். இதற்கிடையே தன்னை பின்தொடரும் மர்மநபர் யாரோ, தனது இ-மெயிலில் இருந்து யாரோ ஆள்மாறாட்டம் செய்து கங்கனாவுடன் தான் தொடர்பில் இருந்தது போல செய்தி அனுப்பியதாக 2016ல் போலீஸில் புகார் அளித்தார் ஹிரித்திக் ரோஷன்..
ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறியதால், இந்த வழக்கு தற்போது மும்பை போலீஸில் இருந்து க்ரைம் பிராஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன் தினம், மும்பை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள க்ரைம் பிரஞ்ச் அலுவலக பிரிவுக்கு வந்த ஹ்ரித்திக் ரோஷன், இந்த புகார் குறித்த தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.