ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் வீணை எஸ்.பாலச்சந்தர் திகில் படங்கள் எடுத்து பிரபலமானவர். அவரைப்போன்றே ஹிந்தியில் திகில் படங்கள் எடுத்து திகில் பட மன்னன் என்று புகழப்பட்டவர் துளசி ராம்சே. 80களில் இவர் எடுத்த திகில் படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. ஹோட்டல் புரானா, மந்திர், தக்கானா, வீரானா, பந்த் தர்வாஸா, போன்றவை முக்கியமான படங்கள்.
முதுமை காரணமாக சினிமா விட்டு விலக்கிய துளசி ராம்சே, மும்பை அந்தேரி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 77. துளசி ராம்சே உடலுக்கு இந்தி திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.