சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
சமீபகாலமாக திரையுலகை சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களுக்கு நடந்த பாலியல் டார்ச்சர்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் டெஸ் ஜோசப் என்கிற பெண் இயக்குனர், மலையாள நடிகரான முகேஷ் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டை டுவிட்டரில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன் நடிகர் முகேஷ் சேனல் ஒன்றில் கோடீஸ்வரன் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வந்தபோது, அதில் பணிபுரிந்த தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார் டெஸ் ஜோசப்.
இந்த குற்றச்சாட்டு குறித்து முகேஷின் மனைவி மெத்தில் தேவிகா கூறும்போது, “என் கணவரிடம் இதுகுறித்து விசாரித்தேன்.. ஆனால் அவரோ அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறினார். வழக்கமாக அவர் என்னிடம் பொய் எதுவும் சொல்வதில்லை” என கூறியுள்ளார்.
பொதுவாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது, தான் அப்படி நடந்து கொள்ளவே இல்லை என்று தான் கணவன்மார்கள் மனைவியிடம் சொல்வார்கள்.. இதில் நடிகர் முகேஷ் மட்டும் சற்றே வித்தியாசமாக அப்படி நிகழ்வு நடந்ததாகவே தனக்கு நினைவு இல்லை என கூறி புதுவிதமாக மனைவியை சமாளித்துள்ளார்.