ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் தற்போது மோகன்லால், மம்முட்டி, திலீப் என சீனியர் நடிகர்களும் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி என ஜூனியர் முன்னணி நடிகர்களும் இருந்தாலும், இந்த இரண்டு லிஸ்டிலும் சேராதவர், அல்லது இரண்டு லிஸ்ட்டுக்கும் பொதுவானவர் என்றால் அது நடிகர் பிருத்விராஜ் மட்டும் தான். நேற்று வெளியாகியுள்ள கூடே திரைப்படம் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 100வது படமாகும். இந்த கணக்கில் மலையாளம் மட்டுமல்லாமல், தமிழி, தெலுங்கு, இந்தி ஆகிய படங்களும் அடங்கும்.
மறைந்த பிரபல மலையாள நடிகர் சுகுமாரனின் இளைய மகனான பிருத்விராஜ் 2002ல் வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும், தனது திறமையாலும், வித்தியாசமான கதை தேர்வினாலும் படிப்படியாக முன்னணி நடிகராக மாறியவர். கமர்ஷியல் அம்சங்களை விட கதையம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.
கடந்த இரண்டு வருடங்களாக பெரிய வெற்றி என எதையும் பாக்காத பிருத்விராஜுக்கு அஞ்சலி மேனன் டைரக்சனில் தற்போது அவரது 100வது படமாக வெளியாகியுள்ள கூடே படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பு உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.
தற்போது மோகன்லால் நடிக்கும் லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள பிருத்விராஜ் தனது 100வது படத்தை முடித்தபின்பே டைரக்ஷன் துறையில் கால்பதிக்க இருக்கிறார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய சிறப்பம்சம்..