ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டிலும் பிசி. ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர் அங்குள்ள முன்னணி சேனல் ஒன்றில் குவான்டிகோ என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்த தொடரின் சமீபத்திய எபிசோட்களில் ஒரு இந்தியரை தீவிரவாதியாக சித்தரித்து கதையை நகர்த்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்தியாவிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஒரு இந்தியரான பிரியங்கா சோப்ரா இதில் எப்படி நடிக்கலாம் என்று அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிரியங்காவின் போஸ்டர்களை கிழித்தும், குவாண்டிகோ விளம்பரத்தை அகற்றியும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இதற்கு பிரியங்கா சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: குவான்டிகோ தொடரால் சிலருடைய மனது புண்பட்டுள்ளதை அறிந்து வருத்தமுற்றேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம் இல்லை. நான் இந்தியன் என்பதை பெருமையாக நினைக்கிறேன். அதில் எப்போதும் மாற்றம் இல்லை. என்று பதிவிட்டுள்ளார். இதேப்போல குவான்டிகா தொடரை ஒளிபரப்பி வரும் சேனலும் வருத்தம் தெரிவித்துள்ளது.