ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமான ஆதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் நூறாவது நாள் விழாவும் சமீபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் காலடியில் தரையில் அமர்ந்தபடி அந்த விழாவை ரசிக்கும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது..
என்னதான் இருந்தாலும் ஒரு தயாரிப்பாளரை தரையில் அமரச் செய்யலாமா என்கிற விமர்சனங்களும் மோகன்லால் மீது வீசப்பட்டு வருகின்றன. ஆனால் ஆண்டனி பெரும்பாவூரை பொறுத்தவரை அவர் மோகன்லாலின் தீவிர பக்தர் என்று சொல்லலாம். மோகன்லால் ஆரம்பித்துக் கொடுத்த ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இன்று வரை செம்மையாக நடத்திவரும் இவர், மோகன்லாலின் சுக துக்கங்களில் எப்போதும் உடன் நிற்பவர்.
அதனாலேயே இந்த நூறாவது நாள் விழாவையும் அவர் தயாரிப்பாளர் என்பதை மறந்து, தனது குடும்ப விழாவாக நினைத்து தரையில் அமர்ந்து ரசித்தார்.. இதிலென்ன தவறு என விளக்கம் அளித்துள்ளது ஆண்டனியின் தரப்பு.