ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமான ஆதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் நூறாவது நாள் விழாவும் சமீபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் காலடியில் தரையில் அமர்ந்தபடி அந்த விழாவை ரசிக்கும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது..
என்னதான் இருந்தாலும் ஒரு தயாரிப்பாளரை தரையில் அமரச் செய்யலாமா என்கிற விமர்சனங்களும் மோகன்லால் மீது வீசப்பட்டு வருகின்றன. ஆனால் ஆண்டனி பெரும்பாவூரை பொறுத்தவரை அவர் மோகன்லாலின் தீவிர பக்தர் என்று சொல்லலாம். மோகன்லால் ஆரம்பித்துக் கொடுத்த ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இன்று வரை செம்மையாக நடத்திவரும் இவர், மோகன்லாலின் சுக துக்கங்களில் எப்போதும் உடன் நிற்பவர்.
அதனாலேயே இந்த நூறாவது நாள் விழாவையும் அவர் தயாரிப்பாளர் என்பதை மறந்து, தனது குடும்ப விழாவாக நினைத்து தரையில் அமர்ந்து ரசித்தார்.. இதிலென்ன தவறு என விளக்கம் அளித்துள்ளது ஆண்டனியின் தரப்பு.