ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த ஜெய்சிம்ஹா படத்தை அடுத்து தேஜா இயக்கத்தில் தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா. இந்தநிலையில், நேற்று முன்தினம் தனது தந்தை என்டிஆரின் நினைவு நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களை சந்தித்தார்.
அப்போது பாலகிருஷ்ணா கூறுகையில், எனது தந்தை என்டிஆர் புகழ் பெற்ற நடிகர் மட்டுமின்றி, ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இதுவரை வழங்கப்படவில்லை. பல அரசுகள் மாறியபோதும் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கவில்லை. அதனால், என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். அதற்காக போராடுவேன் என்று பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.