ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் சரித்திர படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் போடப்பட்ட செட்டில் படமாக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டிய நயன்தாரா, சுதீப், விஜய் சேதுபதி ஆகியோரின் கால்சீட்டிற்காக நீண்ட பிரேக் கொடுத்து விட்டனர்.
ஆனால், இப்போது சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பை தமிழ்நாட்டில் உள்ள பொள்ளாச்சியில் ஒரு கிராமத்தில்தான் படமாக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது அதை விட ஒரு சிறந்த அழகிய கிராமம் கேரளாவில் இருப்பதை கண்டுபிடித்து விட்டனர். அதனால் சிரஞ்சீவி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி முதல்வாரத்தில் கேரளாவில் தொடங்குகிறது.