ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள திரையுலகில் பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வருபவர் இயக்குனர் நாதிர்ஷா. நடிகர் திலீப்பின் நண்பரான இவர், சமீபத்திய நடிகை கடத்தல் வழக்கு பிரச்சனையிலும் சிக்கியவர்.
கடந்த 2015ல் வெளியான 'அமர் அக்பர் ஆண்டனி' படம் மூலம் இயக்குனராக உருவெடுத்த இவர், தனது முதல் படத்தில் தனது நீண்டநாள் நண்பரான திலீப்பை விட்டுவிட்டு, பிருத்விராஜையும், ஜெயசூர்யாவையும் ஹீரோவாக்கினார். படமும் ஹிட்டானது.
இரண்டாவது படத்திலோ கதாசிரியாக தன்னுடன் இணைந்து பணியாற்றிய விஷ்ணு உன்னிகிருஷ்ணனை ஹீரோவாக அறிமுகப்படுத்தி கட்டப்பனயிலே ரித்விக்ரோஷன் என்கிற படத்தை சின்ன பட்ஜெட்டில் எடுத்து அதையும் ஹிட்டாக்கினார் நாதிர்ஷா.
தற்போது அவரது மூன்றாவது படத்தை திலீப்பை வைத்து இயக்குவதை உறுதிப்படுத்தியுள்ள நாதிர்ஷாவும் திலீப்பும், 'கேசு ஈ வீட்டிண்டே நாதன்' என படத்திற்கு டைட்டில் வைத்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளார்கள்.