ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பி.ஆர்.சோப்ராவின் பேரன், அபே சோப்ரா இயக்கியுள்ள படம் இத்திபா. இப்படம் 1969-ம் ஆண்டு வெளிவந்த இத்திபா படத்தின் ரீ-மேக் தான். நவீன இத்திபாவில் சித்தார்த் மல்கோத்ரா, அக்ஷ்ய் கண்ணா, சோனாக்ஷி முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கரண் ஜோகர், ஷாரூக்கான் மற்றும் பிஆர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாரூக், இத்தபா உருவான விதம் குறித்து பேசினார். அவர் பேசுகையில்,
யாஸ் சோப்ரா இறப்பதற்கு முன்னர், இத்திபா படம் எப்படி உருவானது என்று என்னிடம் சொன்னார். சில படங்களை இயக்கிவிட்டு ஓய்வெடுக்கலாம் என்று எண்ணினேன். அந்த இடைவெளியில் விளையாடலாம் என்று முடிவு செய்தேன். அப்படி முடிவு செய்த இரவில் தான் இத்திபா கதை உருவானது என்று விவரித்தார். அவர் சொல்ல சொல்ல எனக்கு ஆர்வம் அதிகமானது. அந்த ஆர்வம் தான் இப்போது இத்திபா மீண்டும் ரீ-மேக்காகி உள்ளது என்றார்.
இத்திபா படம் நவ., 3ம் தேதி வெள்ளியன்று ரிலீஸாக உள்ளது.