ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மலையாளத்தில் சிறந்த குணச்சித்திர நடிகராக தேசிய விருது பெற்ற பின்னர், தற்போது அதிக படங்களில் நடித்து வரும் பிசியான காமெடியனாக மாறிவிட்டார் சுராஜ். அதிலும் காமெடி என்பதையும் தாண்டி குணச்சித்திர வேடங்களிலும் சில இயக்குனர்கள் இவரை உருமாற்றி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் பஹத் பாசிலும் இவரும் இணைந்து நடித்த 'தொண்டிமுதலும் திருக்சாட்சியும்' படம் ஒரு நல்ல உதாரணம்.. அந்தவகையில் தற்போது 'குட்டன் பிள்ளையுடே சிவராத்திரி' மற்றும் சவாரி என இரண்டு படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் சுராஜ் வெஞ்சாரமூடு..
இதில் சவாரி' படத்தில் தேவஸ்தானத்தில் வேலைபார்க்கும் அலுவலராக நடித்துள்ளார் சுராஜ். அசோக் நாயர் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹைலைட்டான இன்னொரு விஷயம் இந்தப்படத்தில் முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம் நடிகர் திலீப். சுராஜிடம் தான் கொண்டுள்ள நட்புக்காகவே திலீப் இப்படி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்.
கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ரிங் மாஸ்டர், லைப் ஆப் ஜோஸுட்டி, சந்திரேட்டன் எவிடயா, டூ கண்ட்ரீஸ் என நான்கு படங்களில் திலீப்புடன் இணைந்து காமெடியனாக நடித்துள்ள சுராஜ் வெஞ்சாரமூடு, தமிழில் ராம் இயக்கத்தில் மம்முட்டி நடித்துள்ள பேரன்பு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.