ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்லால், மம்முட்டி ஆகியோரின் படங்களில் தொடர்ந்து இடம்பிடித்து நடித்துவரும் மலையாள குணச்சித்திர நடிகரான அலான்சியர் லே, அரசியல் விஷயங்களில் தனது கருத்தையும், எதிர்ப்பையும் கூட வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்க தயங்காதவர்.
கடந்த ஜனவரி மாதம் பிஜேபி கட்சிக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக காசர்கோடு சென்ற அலான்சியர், அங்கே அமெரிக்க கொடியை கோவணமாக கட்டிக்கொண்டு, ஒரு வேட்டியை மட்டும் உடுத்திக்கொண்டு, மஞ்சப்பையுடன் பஸ் ஏறி அமெரிக்கா போவதுபோல ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.
சமீபத்திலும் கூட வேறொரு விஷயத்திற்காக இன்னொரு வித்தியாசமான எதிர்ப்பை காட்டியுள்ளார் அலான்சியர் லே. பிஜேபியை சேர்ந்த சரோஜ் பாண்டே என்கிற பெண் அரசியல்வாதி, “பிஜேபி நடத்தும் பேரணிகள் பக்கம் குறைசொல்லும் விதமாக பார்வையை திருப்பும சி.பி.எம் கட்சிக்காரர்களின் கண்களை பிடுங்கி எறிந்துவிடுவேன்” என சர்ச்சையாக பேசினார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்க முடிவு செய்த அலான்சியர் லே, தனது கண்களை கட்டிக்கொண்டு தனது பகுதியில் இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சரோஜ் பாண்டே மீது புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.