ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என, போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது முன்ஜாமின் மனு முடித்து வைக்கப்பட்டது.
முன்னணி நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது இரண்டாவது மனைவி, காவ்யா மாதவனிடம், போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர்; அவரது நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
நடிகை மானபங்க வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பல்சர் சுனில், விசாரணையின் போதும், பல முறை மேடம் என, கூறியது, காவ்யா மாதவனை குறிப்பதாக கருதப்பட்டது. இதனால், காவ்யாமாதவன் கைது செய்யப்படக்கூடும் என, கருதப்பட்டது.
இதனால், முன்ஜாமின் கோரி, கொச்சி உயர் நீதிமன்றத்தில், நடிகை காவ்யா மாதவன் மனு தாக்கல் செய்தார். அதில் திலீப் மனைவி என்பதற்காக, தனக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதாகவும், போலீஸ், சினிமா, மீடியா துறையினர் இணைந்து, இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என்றும், இவ்வழக்கில் அவர், எதிரியாக சேர்க்கப்படவில்லை என்றும் போலீஸ், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், காவ்யா மாதவனின் முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து, உத்தரவிட்டனர். எனினும், திலீப்பின் நெருங்கிய நண்பர், நாதர்ஷாவின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 4ம் தேதிக்கு, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.