பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
நடிகை காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என, போலீஸ் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது முன்ஜாமின் மனு முடித்து வைக்கப்பட்டது.
முன்னணி நடிகை மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது இரண்டாவது மனைவி, காவ்யா மாதவனிடம், போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர்; அவரது நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது.
நடிகை மானபங்க வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பல்சர் சுனில், விசாரணையின் போதும், பல முறை மேடம் என, கூறியது, காவ்யா மாதவனை குறிப்பதாக கருதப்பட்டது. இதனால், காவ்யாமாதவன் கைது செய்யப்படக்கூடும் என, கருதப்பட்டது.
இதனால், முன்ஜாமின் கோரி, கொச்சி உயர் நீதிமன்றத்தில், நடிகை காவ்யா மாதவன் மனு தாக்கல் செய்தார். அதில் திலீப் மனைவி என்பதற்காக, தனக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதாகவும், போலீஸ், சினிமா, மீடியா துறையினர் இணைந்து, இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும், குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என்றும், இவ்வழக்கில் அவர், எதிரியாக சேர்க்கப்படவில்லை என்றும் போலீஸ், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், காவ்யா மாதவனின் முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து, உத்தரவிட்டனர். எனினும், திலீப்பின் நெருங்கிய நண்பர், நாதர்ஷாவின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை, அக்., 4ம் தேதிக்கு, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.