மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கைதி எண்-150 படத்தை அடுத்து சுரேந்தர் ரெட்டி இயக்கும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்பவரின் வாழ்க்கை கதையில் உருவாகும் இந்த படத்தில் சுதந்திர போராட்டத்தில் அவர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 20-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.
மேலும், இந்த படத்திற்காக கலை இயக்குனர் ராஜீவன் ஐதராபாத்திலுள்ள நானக்ராம்கடா என்ற ஸ்டுடியோவில் உய்யலவாடா என்ற கிராமத்தின் செட் போட்டு உருவாக்கி வருகிறார். அதேபோல் இன்னொரு இடத்தில் ஒரு கோட்டை போன்ற செட் அமைக்கப்பட்டு வருகிறதாம். இந்த படத்தில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் நடந்த சில சொல்லப்படாத அதிர்ச்சி தரும் சம்பவங்களும் இடம்பெறுகிறதாம்.
அந்த காட்சிகளில் விஎப்எக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம். அதனால், தற்போது லண்டன் சென்று விஎப்எக்ஸ் டீமுடன் விவாதித்து வருகிறாராம் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி. மேலும், இந்த படத்தில் சிரஞ்சீவி, தாடி கெட்டப்பில் தோன்றுவதால், கடந்த சில மாதங்களாக தாடி, மீசையை பெரிய அளவில் வளர்த்து வருகிறார்.